• Sep 29 2024

நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்...! யாழில் கல்வி அமைச்சர் கருத்து...! samugammedia

Sharmi / Feb 5th 2024, 3:18 pm
image

Advertisement

நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள சகல சிறார்களுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும்.

அதன் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் மாதத்திற்குள் நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

ஜூன் மாதம், அதற்கேற்ப, புதிய தொழில்நுட்பத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும்.

இதனடிப்படையில்,  இலங்கையில் உள்ள 3,000 உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் நிறுவப்பட்டுள்ள கணினி வள நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். யாழில் கல்வி அமைச்சர் கருத்து. samugammedia நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.யாழ் இந்துக் கல்லூரியில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டிலுள்ள சகல சிறார்களுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும்.அதன் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் மாதத்திற்குள் நாட்டிலுள்ள உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். ஜூன் மாதம், அதற்கேற்ப, புதிய தொழில்நுட்பத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வியைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும்.இதனடிப்படையில்,  இலங்கையில் உள்ள 3,000 உயர்தரப் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதேவேளை, ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் நிறுவப்பட்டுள்ள கணினி வள நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement