• Sep 21 2024

திடீர் பணிப்புறக்கணிப்பால் இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்!

Chithra / Aug 6th 2024, 9:06 am
image

Advertisement


தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை புறக்கணித்துள்ளதால் ரயில் போக்குவரத்து சேவைசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் தாமதங்கள் மற்றும் இரத்துச் செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெமட்டகொட புகையிரத நிலைய ஊழியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகியுள்ளனர்.

இதன் காரணமாக காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே புகையிரதம் மற்றும் பதுளை ஒடிசி ஆகிய ரயில்களை இதுவரையில் இயக்க முடியவில்லை என புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.

இந்நிலைமை காரணமாக பல ரயில் பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திடீர் பணிப்புறக்கணிப்பால் இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை புறக்கணித்துள்ளதால் ரயில் போக்குவரத்து சேவைசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் தாமதங்கள் மற்றும் இரத்துச் செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தெமட்டகொட புகையிரத நிலைய ஊழியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகியுள்ளனர்.இதன் காரணமாக காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த பொடி மெனிகே புகையிரதம் மற்றும் பதுளை ஒடிசி ஆகிய ரயில்களை இதுவரையில் இயக்க முடியவில்லை என புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்தார்.இந்நிலைமை காரணமாக பல ரயில் பயணங்களை இரத்து செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement