• Sep 08 2024

தேர்தலுக்கு பணம் கொடுக்க திறைசேரி தயார்- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு..!

Sharmi / Jul 27th 2024, 2:29 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய பணத்தை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தேர்தலுக்காக கிட்டத்தட்ட 08 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாகவும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அச்சிடும் பணிகள், பாதுகாப்புப் பணிகள், எரிபொருள், வாக்குப் பெட்டிகள் அமைத்தல் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் இந்தப் பணத்தை விடுவிக்க திறைசேரி தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மதிப்பிடப்பட்ட செலவு அதிகரித்தால், நிச்சயமற்ற நடவடிக்கைகளுக்கு தற்போது பணம் இருப்பதால், இதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு பணம் கொடுக்க திறைசேரி தயார்- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய பணத்தை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தேர்தலுக்காக கிட்டத்தட்ட 08 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாகவும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.அச்சிடும் பணிகள், பாதுகாப்புப் பணிகள், எரிபொருள், வாக்குப் பெட்டிகள் அமைத்தல் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் இந்தப் பணத்தை விடுவிக்க திறைசேரி தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மதிப்பிடப்பட்ட செலவு அதிகரித்தால், நிச்சயமற்ற நடவடிக்கைகளுக்கு தற்போது பணம் இருப்பதால், இதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement