• May 02 2024

மாவீரர்களுக்கு அஞ்சலி - முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட மீள விளக்கமறியலில்!

Chithra / Jan 25th 2024, 5:58 pm
image

Advertisement


 

மட்டக்களப்பு - வவுணதீவு காவல்நிலைய வளாகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த வருடம் நவம்பர் 27ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் வவுணதீவு காவல் நிலையத்துக்கு முன்னால் அஞ்சலி செலுத்தியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டனர்.

மாவீரர்களுக்கு அஞ்சலி - முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட மீள விளக்கமறியலில்  மட்டக்களப்பு - வவுணதீவு காவல்நிலைய வளாகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்போது, அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.கடந்த வருடம் நவம்பர் 27ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் வவுணதீவு காவல் நிலையத்துக்கு முன்னால் அஞ்சலி செலுத்தியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement