• Sep 20 2024

கடைகள் மற்றும் கோவிலில் துணிகர திருட்டு - சிறுவன் உட்பட இருவர் கைது! தமிழர் பகுதியில் சம்பவம்

Chithra / Aug 5th 2024, 7:41 am
image

Advertisement

 


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில்  இருவர்  புதுக்குடியிருப்பு பொலிஸாரால்  நேற்றையதினம்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை, மந்துவில்லில் ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என  ஐந்து கடைகளும், புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தில் உண்டியலும்  உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது  நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து  திருடப்பட்ட 46,230 ரூபா பணமும், திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

10ஆம் வட்டாரம்   மந்துவில்லை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 24 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான திருட்டு சம்பவங்கள்  தொடர்ச்சியாக  இடம்பெற்று வருவதனால் மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்குடியிருப்பு பொலிஸார் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடைகள் மற்றும் கோவிலில் துணிகர திருட்டு - சிறுவன் உட்பட இருவர் கைது தமிழர் பகுதியில் சம்பவம்  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகள் மற்றும் கோவிலையும் உடைத்து திருடிய குற்றச்சாட்டில்  இருவர்  புதுக்குடியிருப்பு பொலிஸாரால்  நேற்றையதினம்  கைது செய்யப்பட்டுள்ளனர்.புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை, மந்துவில்லில் ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என  ஐந்து கடைகளும், புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தில் உண்டியலும்  உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது  நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து  திருடப்பட்ட 46,230 ரூபா பணமும், திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.10ஆம் வட்டாரம்   மந்துவில்லை சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 24 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.இவ்வாறான திருட்டு சம்பவங்கள்  தொடர்ச்சியாக  இடம்பெற்று வருவதனால் மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுக்குடியிருப்பு பொலிஸார் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement