• Sep 08 2024

இரு அதிசொகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி - பலர் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jul 17th 2024, 10:24 am
image

Advertisement

 


குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் இரு அதிசொாகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதோடு, 8  பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றும்  கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இரு அதிசொகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி - பலர் வைத்தியசாலையில் அனுமதி  குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் இரு அதிசொாகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதோடு, 8  பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றும்  கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement