திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருவர் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஈச்சந்தீவு சின்னத்தோட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஆயிஸ் ரூபன் மற்றும் 35 வயதுடைய நபர் உட்பட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களது படகு கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.