• Jul 01 2024

ஜனாதிபதிக்கு பில்லி, சூனியம் வைத்த இரு அமைச்சர்கள்!

Tamil nila / Jun 28th 2024, 6:42 pm
image

Advertisement

மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி  வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த அமைச்சர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாலத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அந்த இருவரையும் தவிர, மேலும் இரண்டு பேரை இந்த வழக்கில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஷாம்னாஸ் மற்றும் ரமீஸ் இருவரும், முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலே மேயராக பதவி வகித்த காலகட்டத்தில், ​​மாலே நகர சபையின் உறுப்பினர்களாக அவருடன் பணியாற்றியுள்ளனர்.

அதிபருக்கு எதிரான நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன் இந்த சம்பவம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் மாலத்தீவு அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதிக்கு பில்லி, சூனியம் வைத்த இரு அமைச்சர்கள் மாலத்தீவில் அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி  வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார்.இந்த அமைச்சர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாலத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அந்த இருவரையும் தவிர, மேலும் இரண்டு பேரை இந்த வழக்கில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஏழு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஷாம்னாஸ் மற்றும் ரமீஸ் இருவரும், முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலே மேயராக பதவி வகித்த காலகட்டத்தில், ​​மாலே நகர சபையின் உறுப்பினர்களாக அவருடன் பணியாற்றியுள்ளனர்.அதிபருக்கு எதிரான நடவடிக்கையில் இருவரும் ஈடுபட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன் இந்த சம்பவம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் மாலத்தீவு அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement