வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு பதற்றமா சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேச சபை உறுப்பினர்கள்குவிக்கப்பட்ட பொலிஸார் வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அங்கு பதற்றமா சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.