• Sep 20 2024

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

Sharmi / Sep 18th 2024, 7:30 pm
image

Advertisement

வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று(18) மாலை இவ்விபத்து இடம்பெற்றது.

A9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பயணித்த வேளை வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய  நபர் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஒமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு. வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று(18) மாலை இவ்விபத்து இடம்பெற்றது.A9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், ஓமந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பயணித்த வேளை வீதியில் சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய  நபர் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் ஒமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement