கடவத்தை மஹாகட சந்தி பகுதியில் கைக்குண்டு வைத்திருந்ததற்காக இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது கைக்குண்டைக் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கடவத்தை மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது. கடவத்தை மஹாகட சந்தி பகுதியில் கைக்குண்டு வைத்திருந்ததற்காக இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது கைக்குண்டைக் கண்டுபிடித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கடவத்தை மற்றும் எல்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.