• May 18 2024

வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் - இரு பெண்கள் கைது..! samugammedia

Tamil nila / Jan 20th 2024, 10:39 pm
image

Advertisement

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இரு பெண்கள் இன்று (20.01) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த 22 வயது யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் - இரு பெண்கள் கைது. samugammedia வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக இரு பெண்கள் இன்று (20.01) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த 22 வயது யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement