• Sep 21 2024

ஒன்லைனில் பொருட்களை ஓடர் செய்த இரு இளைஞர்கள் அதிரடியாக கைது

Chithra / Aug 7th 2024, 11:58 am
image

Advertisement

  

கொழும்பில் இணையம் மூலம்  பொருட்களை ஓடர் செய்து விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல்வேறு பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளர்.

மடிக்கணனி, கைத்தொலைபேசி, தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் இவ்வாறு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஒன்லைனில் பொருட்களை ஓடர் செய்த இரு இளைஞர்கள் அதிரடியாக கைது   கொழும்பில் இணையம் மூலம்  பொருட்களை ஓடர் செய்து விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 20 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வாரியபொல மற்றும் சுனந்தபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல்வேறு பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளர்.மடிக்கணனி, கைத்தொலைபேசி, தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் இவ்வாறு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement