ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடமையாற்றிய முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தனது தலைமை பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சியை இளைஞர்களிடம் பாரம் கொடுக்க வேண்டும் என கருதி கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது தனது தலைமை பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து 2024 ஜனவரி 5 ஆம் திகதி கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட பொதுக்கூட்டத்தின் போது அவர் கட்சியின் புதிய தவிசாளராக உயர்பீடத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.