• Oct 23 2024

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடாது-ரஞ்சன் ராமநாயக்க கருத்து..!

Sharmi / Oct 23rd 2024, 8:27 am
image

Advertisement

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடாது  எனவும் அதன் காரணமாக தம்மையும் ஏனையோரையும் எதிரிகளாகக் கருத வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

நீர்கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது ஆசிரியர் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பாராளுமன்றத்தில் போராடியதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாங்கள் ஒன்றிணைந்து போராடிய போரில் அரசாங்கம் வெற்றி பெறும் என்பதே தமது ஒரே நம்பிக்கை என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடாது-ரஞ்சன் ராமநாயக்க கருத்து. ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடாது  எனவும் அதன் காரணமாக தம்மையும் ஏனையோரையும் எதிரிகளாகக் கருத வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.நீர்கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது ஆசிரியர் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.ஊழலுக்கு எதிராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து பாராளுமன்றத்தில் போராடியதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.தாங்கள் ஒன்றிணைந்து போராடிய போரில் அரசாங்கம் வெற்றி பெறும் என்பதே தமது ஒரே நம்பிக்கை என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement