• Jul 07 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகம் திறந்துவைப்பு...!

Sharmi / Jul 4th 2024, 7:37 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகம் இன்று(04)  மாலை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த அலுவலகம் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தனின் அழைப்பினை ஏற்று வந்த எதிர்க்கட்சி தலைவர், குறித்த அலுவலகத்தினை திறந்து வைத்ததுடன் கட்சி ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடினார்.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு வருகை தரும்போது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஆதரவாளர்களை சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இதன்போது பொதுமக்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய எதிர்க்கட்சி தலைவர்,  பொதுமக்களின் கோரிக்கை கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகம் திறந்துவைப்பு. ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகம் இன்று(04)  மாலை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த அலுவலகம் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தனின் அழைப்பினை ஏற்று வந்த எதிர்க்கட்சி தலைவர், குறித்த அலுவலகத்தினை திறந்து வைத்ததுடன் கட்சி ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடினார்.எதிர்காலத்தில் மட்டக்களப்பு வருகை தரும்போது கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஆதரவாளர்களை சந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.இதன்போது பொதுமக்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய எதிர்க்கட்சி தலைவர்,  பொதுமக்களின் கோரிக்கை கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement