• Jun 26 2025

தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஐ.நா. உறுதி - தமிழ் எம்.பிக்களிடம் வோல்கர் டர்க் தெரிவிப்பு

UN
Chithra / Jun 26th 2025, 9:27 am
image


வடக்குஇ கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுதியாகவுள்ளது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலில் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டன என்று சந்திப்பில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் தெரிவித்தனர்.

தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஐ.நா. உறுதி - தமிழ் எம்.பிக்களிடம் வோல்கர் டர்க் தெரிவிப்பு வடக்குஇ கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுதியாகவுள்ளது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேற்படி கலந்துரையாடலில் வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டன என்று சந்திப்பில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement