• Jun 05 2025

நிலவும் சீரற்ற காலநிலை: புத்தளத்தில் 1121 பேர் பாதிப்பு..!

Sharmi / Jun 3rd 2025, 8:10 am
image

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் நேற்றையதினம்(02) வரை 325 குடும்பங்களைச் சேர்ந்த 1121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவில் 120 கிராம சேவகர் பிரிவுகளில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1121 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இங்கு 18 கிராம சேவகர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 166 பேரும், மஹாவௌ பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம சேவகர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேரும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவில் 6 கிராம சேவகர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம சேவகர் பிரிவில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 321 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 வியாபார நிலையங்களும், 6 பொதுக்கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.



நிலவும் சீரற்ற காலநிலை: புத்தளத்தில் 1121 பேர் பாதிப்பு. சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் நேற்றையதினம்(02) வரை 325 குடும்பங்களைச் சேர்ந்த 1121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.புத்தளம் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவில் 120 கிராம சேவகர் பிரிவுகளில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1121 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை, மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.இங்கு 18 கிராம சேவகர் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 9 கிராம சேவகர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 166 பேரும், மஹாவௌ பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம சேவகர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேரும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவில் 6 கிராம சேவகர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 24 கிராம சேவகர் பிரிவில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 230 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, கடும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 321 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 வியாபார நிலையங்களும், 6 பொதுக்கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement