• Jun 07 2025

உமிழ்வு பரிசோதனையில் தோல்வியடைந்த வாகனங்கள் - எடுக்கப்பட்ட அதிரடி நடவஎக்கை

Chithra / Jun 6th 2025, 9:16 am
image


கொழும்பின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட வாகன புகை  பரிசோதனையில், 50 சதவீத டீசல் வாகனங்கள் தீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடுவது தெரியவந்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று (05) இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சுமார் 15 சதவீத பெட்ரோல் வாகனங்களும் இந்த உமிழ்வு சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் தாசுன் ஜனக குறிப்பிட்டுள்ளார்.

வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் மற்றும் காவல் துறை இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ், உமிழ்வு சோதனையில் தேர்ச்சி பெறாத அனைத்து வாகனங்களுக்கும் பராமரிப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, அவர்களின் வாகன வருமான வரி பத்திரம் இடைநிறுத்தப்படும்.

மேலும் பராமரிப்பு உத்தரவு கிடைத்த 14 நாட்களுக்குள் அவர்கள் தங்கள் வாகனத்தை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். 

இல்லையெனில், 14 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உமிழ்வு பரிசோதனையில் தோல்வியடைந்த வாகனங்கள் - எடுக்கப்பட்ட அதிரடி நடவஎக்கை கொழும்பின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட வாகன புகை  பரிசோதனையில், 50 சதவீத டீசல் வாகனங்கள் தீங்கு விளைவிக்கும் புகையை வெளியிடுவது தெரியவந்துள்ளது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று (05) இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 சதவீத பெட்ரோல் வாகனங்களும் இந்த உமிழ்வு சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் தாசுன் ஜனக குறிப்பிட்டுள்ளார்.வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் மற்றும் காவல் துறை இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ், உமிழ்வு சோதனையில் தேர்ச்சி பெறாத அனைத்து வாகனங்களுக்கும் பராமரிப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி, அவர்களின் வாகன வருமான வரி பத்திரம் இடைநிறுத்தப்படும்.மேலும் பராமரிப்பு உத்தரவு கிடைத்த 14 நாட்களுக்குள் அவர்கள் தங்கள் வாகனத்தை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில், 14 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement