• May 13 2024

ஈழத் தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்த் அவர்களது மறைவு மக்களுக்குப் பேரிழப்பு - தமிழ் தேசிய முன்னணி தெரிவிப்பு...!samugammedia

Anaath / Dec 30th 2023, 1:29 pm
image

Advertisement

தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும் முன்னைநாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்  - சுகயீனம் காரணமாக மறைந்த செய்தி உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் - மரியாதையும் - பற்றும் கொண்டு தனது இறுதிக்காலம் வரை விஜயகாந்த் வாழ்ந்திருந்தார். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் உயரிய மரியாதைக்குரியவராக விஜயகாந்த் நிறைந்திருந்தார்.

அவரது மறைவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு - அவரது இழப்பிலும் அவரது குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்வதோடு - எமது ஆழமான வருத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈழத் தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்த் அவர்களது மறைவு மக்களுக்குப் பேரிழப்பு - தமிழ் தேசிய முன்னணி தெரிவிப்பு.samugammedia தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும் முன்னைநாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்  - சுகயீனம் காரணமாக மறைந்த செய்தி உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் - மரியாதையும் - பற்றும் கொண்டு தனது இறுதிக்காலம் வரை விஜயகாந்த் வாழ்ந்திருந்தார். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் உயரிய மரியாதைக்குரியவராக விஜயகாந்த் நிறைந்திருந்தார்.அவரது மறைவானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையிலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு - அவரது இழப்பிலும் அவரது குடும்பத்தின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்வதோடு - எமது ஆழமான வருத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement