• Oct 11 2024

பிரதமர் மற்றும் அமைச்சரின் வைரலான அஞ்சல் புகைப்படங்கள் - தபால் திணைக்களம் விளக்கம்

Anaath / Oct 10th 2024, 12:39 pm
image

Advertisement

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பான அண்மைய அறிக்கைகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோருக்கு தனிப்பட்ட தபால்தலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டது.

இதுதொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய திணைக்களம், பல பிரிவுகளின் கீழ் தபால்தலைகளை வெளியிட்டதாக குறிப்பிட்டது. விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகள் தனிப் பயனாக்கப்பட்ட முத்திரை வகையின் கீழ் இருந்தன.

எந்தவொரு நபரும் தங்கள் படத்துடன் தனிப் பயனாக்கப்பட்ட முத்திரையைப் பெறலாம், சிறப்பு நிகழ்வுகளைக் குறிக்க தனிப் பயனாக்கப்பட்ட தபால்தலைகளை வழங்குவது வழக்கம் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய தபால்தலைகள் வெளியிடப்படவில்லை எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மற்றும் அமைச்சரின் வைரலான அஞ்சல் புகைப்படங்கள் - தபால் திணைக்களம் விளக்கம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய முத்திரைகள் தொடர்பான அண்மைய அறிக்கைகள் தொடர்பில் தபால் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.உலக அஞ்சல் தினத்தை நினைவு கூறும் வகையில் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஹேரத் ஆகியோருக்கு தனிப்பட்ட தபால்தலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டது.இதுதொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய திணைக்களம், பல பிரிவுகளின் கீழ் தபால்தலைகளை வெளியிட்டதாக குறிப்பிட்டது. விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகள் தனிப் பயனாக்கப்பட்ட முத்திரை வகையின் கீழ் இருந்தன.எந்தவொரு நபரும் தங்கள் படத்துடன் தனிப் பயனாக்கப்பட்ட முத்திரையைப் பெறலாம், சிறப்பு நிகழ்வுகளைக் குறிக்க தனிப் பயனாக்கப்பட்ட தபால்தலைகளை வழங்குவது வழக்கம் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் உருவங்கள் அடங்கிய தபால்தலைகள் வெளியிடப்படவில்லை எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement