கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குணநாதன் நேற்று கல்முனை கல்வி வலையத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் கல்முனை வலய அதிபர்களுடான சந்திப்பு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் க.குணநாதன் கருத்து தெரிவிக்கையில்
மாணவர்களின் கல்வி, நிர்வாகம், மாணவர்கள் ஒழுக்கம் என்பவற்றிலும், ஆசிரியர்களிடமிருந்து உச்சப் பயனைப் பெறுவதிலும் அதிபர்களின் வகிபாகம் மிக அதிகம்.
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான வழிகாட்டல்களை அதிபர்கள் செய்ய வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தினார்.
வலயக் கல்விப் பணிப்பாளர் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயனை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை குறிப்பிட்ட அரசு அளிக்கும் நிதி உதவி மாணவர்களுக்கு அதிபர்கள் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்க கூடாது.
மேலும் பௌதீக வளம் குறைந்த மூன்று பாடசாலைகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இருபது மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவுக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது
கிழக்கு மாகாண கல்வி செயலாளர் கல்முனைக்கு விஜயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குணநாதன் நேற்று கல்முனை கல்வி வலையத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் கல்முனை வலய அதிபர்களுடான சந்திப்பு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.இதன் போது கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் க.குணநாதன் கருத்து தெரிவிக்கையில்மாணவர்களின் கல்வி, நிர்வாகம், மாணவர்கள் ஒழுக்கம் என்பவற்றிலும், ஆசிரியர்களிடமிருந்து உச்சப் பயனைப் பெறுவதிலும் அதிபர்களின் வகிபாகம் மிக அதிகம்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான வழிகாட்டல்களை அதிபர்கள் செய்ய வேண்டியது மிக அவசியம் என வலியுறுத்தினார்.வலயக் கல்விப் பணிப்பாளர் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயனை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை குறிப்பிட்ட அரசு அளிக்கும் நிதி உதவி மாணவர்களுக்கு அதிபர்கள் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்க கூடாது.மேலும் பௌதீக வளம் குறைந்த மூன்று பாடசாலைகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இருபது மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவுக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது