• Sep 17 2024

தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம்- சித்தார்த்தன் எம்.பி தெரிவிப்பு!

Tamil nila / Jul 17th 2024, 9:31 pm
image

Advertisement

தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளாெட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாேதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மே லும் கருத்து தெரிவிக்கையில், 

புளொட் அமைப்பின் தலைவர் காலமாகி 38 வருடங்கள் முடிந்து விட்டது. இந்த 38 வருடங்களுக்குள் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட என்ன காரணத்திற்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டதோ அந்த காரணம் இன்றும் இம்மியளவும் மாறாது அப்படியே இருகிறது. 

மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதை பார்க்க கூடியதாகவுள்ளது. 

சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம், அரசியல், கல்வி, எண்ணிக்கை என அது நீண்டு செல்கிறது. அண்மைக் காலமாக இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா என பல நாடுகளுக்கு அதிகளவில் செல்கிறார்கள். 15 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் குடி புகுந்துள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலை தமிழ் மக்களை பின்னடைவுக்கும், படுபாதாளத்திற்கும் கொண்டு செல்லும். 

தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் வெளிநாடு செல்வது சரி. அது அவர்களுடைய விருப்பம். ஆனாலும் ஒரு இனமாக பார்க்கின்ற போது மிகவும் பின்னடைவு. ஆனாலும் வெளிநாடுகளில் உள்ள எங்களது உறவுகள் எங்களுக்கு ஒரு உந்து சக்தியாக, பலமாக இருக்கிறார்கள்.  

போச்சுவார்த்தை என்று வருகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கூட புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச வேண்டும் எனச் சொல்கிறார். அவர்களிடம் இருக்கக் கூடிய அந்த பொருளாதரா பலத்தை இங்கு கொண்டு வரலாம் என சிந்திக்கிறார். அது பற்றி எம்முடன் கதைக்கின்றார். ஆனாலும் தொடர்ந்து வருகின்ற எந்தவொரு அரசாங்கமும் தமிழ மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை கொடுக்க தயாரில்லை. 

எங்களது இயக்கம் உட்பட எல்லா இயங்களிலும் இருந்தும் ஆயிரம் ஆயிரம் போராளிகள தலைவர்கள் ஏன் மடிந்தார்களோ அதற்கான காரணம் இன்றும் இருகிக்கிறது. 

தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம்.  மக்களில் பலர் அதை விரும்புகிறார்கள். சிலர் விரும்பவில்லை. சிலர் இது ஒரு விசப் பரீடசையாக இருக்கும் என்கிறார்கள். 

சில வேளைகளில் நாம் விரும்பக் கூடிய வாக்குளை கொண்டிருக்காவிட்டால் அது பாதிக்கும் என நினைக்கிறார்கள். கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறது. மக்கள் கட்சிகள் ஒற்றுமையாக சொல்வதை கேட்கிறார்கள் என வெளிநாடுகள் நம்பும் நிலை வரும். ஒற்றுமையை காட்ட வேண்டும். 

இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சேனாதிராஜா கூட அதன் முக்கியத்துவம் தொடர்பில் கூறியுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்படட தலைவர் சிறிதரன் கூட அது சரியென சொல்லியுள்ளார். இப்படியாக தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய பலர் ஒத்துக் கொள்கிறார்கள். 

இப்படியாக எல்லோருமாக ஒற்றுமையாக வரக் கூடிய ஒரு நிலையில் நாம் எமது பலத்தை காட்டக் கூடியதாக இருக்கும். ஒற்றுமையை காட்டுவதன் மூலம் நாம் உலக நாடுகளிடையே எமது சரியான நிலைப்பாட்டை காட்டக் கூடியதாக இருக்கும். அதற்காகவே இந்த முயற்சியை செய்கிறோம் எனத் தெரிவித்தார். 


தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம்- சித்தார்த்தன் எம்.பி தெரிவிப்பு தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளாெட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாேதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மே லும் கருத்து தெரிவிக்கையில், புளொட் அமைப்பின் தலைவர் காலமாகி 38 வருடங்கள் முடிந்து விட்டது. இந்த 38 வருடங்களுக்குள் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட என்ன காரணத்திற்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டதோ அந்த காரணம் இன்றும் இம்மியளவும் மாறாது அப்படியே இருகிறது. மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதை பார்க்க கூடியதாகவுள்ளது. சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம், அரசியல், கல்வி, எண்ணிக்கை என அது நீண்டு செல்கிறது. அண்மைக் காலமாக இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா என பல நாடுகளுக்கு அதிகளவில் செல்கிறார்கள். 15 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் குடி புகுந்துள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலை தமிழ் மக்களை பின்னடைவுக்கும், படுபாதாளத்திற்கும் கொண்டு செல்லும். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் வெளிநாடு செல்வது சரி. அது அவர்களுடைய விருப்பம். ஆனாலும் ஒரு இனமாக பார்க்கின்ற போது மிகவும் பின்னடைவு. ஆனாலும் வெளிநாடுகளில் உள்ள எங்களது உறவுகள் எங்களுக்கு ஒரு உந்து சக்தியாக, பலமாக இருக்கிறார்கள்.  போச்சுவார்த்தை என்று வருகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கூட புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச வேண்டும் எனச் சொல்கிறார். அவர்களிடம் இருக்கக் கூடிய அந்த பொருளாதரா பலத்தை இங்கு கொண்டு வரலாம் என சிந்திக்கிறார். அது பற்றி எம்முடன் கதைக்கின்றார். ஆனாலும் தொடர்ந்து வருகின்ற எந்தவொரு அரசாங்கமும் தமிழ மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை கொடுக்க தயாரில்லை. எங்களது இயக்கம் உட்பட எல்லா இயங்களிலும் இருந்தும் ஆயிரம் ஆயிரம் போராளிகள தலைவர்கள் ஏன் மடிந்தார்களோ அதற்கான காரணம் இன்றும் இருகிக்கிறது. தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம்.  மக்களில் பலர் அதை விரும்புகிறார்கள். சிலர் விரும்பவில்லை. சிலர் இது ஒரு விசப் பரீடசையாக இருக்கும் என்கிறார்கள். சில வேளைகளில் நாம் விரும்பக் கூடிய வாக்குளை கொண்டிருக்காவிட்டால் அது பாதிக்கும் என நினைக்கிறார்கள். கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறது. மக்கள் கட்சிகள் ஒற்றுமையாக சொல்வதை கேட்கிறார்கள் என வெளிநாடுகள் நம்பும் நிலை வரும். ஒற்றுமையை காட்ட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சேனாதிராஜா கூட அதன் முக்கியத்துவம் தொடர்பில் கூறியுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்படட தலைவர் சிறிதரன் கூட அது சரியென சொல்லியுள்ளார். இப்படியாக தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய பலர் ஒத்துக் கொள்கிறார்கள். இப்படியாக எல்லோருமாக ஒற்றுமையாக வரக் கூடிய ஒரு நிலையில் நாம் எமது பலத்தை காட்டக் கூடியதாக இருக்கும். ஒற்றுமையை காட்டுவதன் மூலம் நாம் உலக நாடுகளிடையே எமது சரியான நிலைப்பாட்டை காட்டக் கூடியதாக இருக்கும். அதற்காகவே இந்த முயற்சியை செய்கிறோம் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement