• May 16 2025

மக்கள் எமக்கு அளித்த ஆணைக்கு அமைய ஆட்சியமைப்போம்- ஜனாதிபதி உறுதி..!

Sharmi / May 15th 2025, 9:23 am
image

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமக்கு அளித்த ஆணைக்கு அமைய 267 சபைகளிலும் நிச்சயம் ஆட்சியமைப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் 60 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவிவபத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜுன் 2 ஆம் திகதிக்கு பிறகு எமக்கு கிராமத்தின் பலமும் கிட்டும். 152 சபைகளில் ஆரம்பத்திலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்.

ஏனைய 115 சபைகளில், சபை நடக்கும் நாளில் ஆட்சி அமைக்கப்படும்.

மக்கள் ஆணை என்றால் என்னவென்பதை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். சபைகளில் முதல் இரு இடங்களை பிடித்த தரப்புகள்தான் ஆட்சியமைக்க வேண்டும் என்றே மக்கள் கருதுகின்றனர்.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி வென்ற 267 சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம். அது மக்கள் ஆணை மூலம் எமக்கு வழங்கப்பட்ட உரிமையாகும்.

எனவே, நாம் மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்படுவோம். அதற்கு எதிராக எவரேனும் செயற்பட முற்பட்டால் அரசமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் போன்றவற்றின் ஊடாக செயற்பட நாமும் தயார்.

முடிந்தால் ஆட்சியை அமையுங்கள். அவ்வாறு அமைத்தாலும் மூன்று, நான்கு மாதங்கள்தான் பயணிக்க முடியும். நாம் மக்கள் ஆணையைதான் மதிக்கின்றோம். அதனுடன் விளையாட முற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.



மக்கள் எமக்கு அளித்த ஆணைக்கு அமைய ஆட்சியமைப்போம்- ஜனாதிபதி உறுதி. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் எமக்கு அளித்த ஆணைக்கு அமைய 267 சபைகளிலும் நிச்சயம் ஆட்சியமைப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.ஜே.வி.பியின் 60 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவிவபத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜுன் 2 ஆம் திகதிக்கு பிறகு எமக்கு கிராமத்தின் பலமும் கிட்டும். 152 சபைகளில் ஆரம்பத்திலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். ஏனைய 115 சபைகளில், சபை நடக்கும் நாளில் ஆட்சி அமைக்கப்படும்.மக்கள் ஆணை என்றால் என்னவென்பதை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். சபைகளில் முதல் இரு இடங்களை பிடித்த தரப்புகள்தான் ஆட்சியமைக்க வேண்டும் என்றே மக்கள் கருதுகின்றனர். அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி வென்ற 267 சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம். அது மக்கள் ஆணை மூலம் எமக்கு வழங்கப்பட்ட உரிமையாகும்.எனவே, நாம் மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்படுவோம். அதற்கு எதிராக எவரேனும் செயற்பட முற்பட்டால் அரசமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் போன்றவற்றின் ஊடாக செயற்பட நாமும் தயார்.முடிந்தால் ஆட்சியை அமையுங்கள். அவ்வாறு அமைத்தாலும் மூன்று, நான்கு மாதங்கள்தான் பயணிக்க முடியும். நாம் மக்கள் ஆணையைதான் மதிக்கின்றோம். அதனுடன் விளையாட முற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement