• Sep 20 2024

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக முடியாமல் போன சஜித்தை நாட்டின் ஜனாதிபதியாக்குவோம்! - தயாசிறி சூளுரை

Chithra / Aug 30th 2024, 10:20 am
image

Advertisement


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க முற்பட்டபோது அதற்கு ரணில் விக்ரமசிங்க அன்று தடைகளை ஏற்படுத்தி தடுத்தார். ஆனால் சஜித் பிரேமதாசவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தங்கல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ளும்போது நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். 

ஆனால் அவரின் பலவீனமான தலைமை காரணமாக படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைய ஆரம்பித்தது. 

கடந்த பொதுத் தேர்தலுடன் பூஞ்சியத்துக்கே ஐக்கிய தேசிய கட்சி சென்றது.

இந்த நிலை ஏற்படும் என்றே இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்துக்கொள்ள நான் கடும் முயற்சி எடுத்தேன். அதன் பலனாக நான் கட்சியில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது.

அதனால் அன்று சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக்க என்னால் முடியாவிட்டாலும், இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெரும்பாலான ஆதரவாளர்களுடன் எதிர்வரும் 21ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 76 வயது. இன்னும்  5வருடங்களுக்கு அதிகாரத்தை கேட்கிறார். தற்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போன்று நடந்து செல்லும்போது சரிக்கி விழுகிறார்.

ஒரு தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டால் மீண்டும் 3 தினங்களுக்கு பின்னரே அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்வார்.  முன்னர் இருந்த பலமும் சக்தியும் தற்போது அவரிடம் இல்லை.   என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக முடியாமல் போன சஜித்தை நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் - தயாசிறி சூளுரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க முற்பட்டபோது அதற்கு ரணில் விக்ரமசிங்க அன்று தடைகளை ஏற்படுத்தி தடுத்தார். ஆனால் சஜித் பிரேமதாசவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.தங்கல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ளும்போது நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் அவரின் பலவீனமான தலைமை காரணமாக படிப்படியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைய ஆரம்பித்தது. கடந்த பொதுத் தேர்தலுடன் பூஞ்சியத்துக்கே ஐக்கிய தேசிய கட்சி சென்றது.இந்த நிலை ஏற்படும் என்றே இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமித்துக்கொள்ள நான் கடும் முயற்சி எடுத்தேன். அதன் பலனாக நான் கட்சியில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது.அதனால் அன்று சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக்க என்னால் முடியாவிட்டாலும், இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெரும்பாலான ஆதரவாளர்களுடன் எதிர்வரும் 21ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம்.ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 76 வயது. இன்னும்  5வருடங்களுக்கு அதிகாரத்தை கேட்கிறார். தற்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போன்று நடந்து செல்லும்போது சரிக்கி விழுகிறார்.ஒரு தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டால் மீண்டும் 3 தினங்களுக்கு பின்னரே அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்வார்.  முன்னர் இருந்த பலமும் சக்தியும் தற்போது அவரிடம் இல்லை.   என்றார்.

Advertisement

Advertisement

Advertisement