அன்றைய மஹிந்த அரசு வழங்கவிருந்த குறித்த வீட்டுத் திட்டத்தை சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள் முன்னின்று இதற்கெதிராக வழக்கு தொடரப்பட்டு நிறுத்தப்பட்டது.
ஜனாதிபதி அதிகாரத்தை கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் படி நாம் பல தடவை மஹிந்த ராஜபக்ஷவை கேட்டிருந்தோம். ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி, விரைவில் இந்த வீட்டித்திட்டத்தை வழங்குவோம் என பகிரங்கமாக சொல்லியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்தார்.
நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை விரைவில் மீட்டு கொடுப்போம் அநுரவின் கருத்தால் மகிழ்ச்சியில் உலமா கட்சி நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு மீட்டு கொடுப்போம் என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் கருத்தை பாராட்டுவதாக உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.இதுபற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,சவூதி அரசால் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருந்தது.அன்றைய மஹிந்த அரசு வழங்கவிருந்த குறித்த வீட்டுத் திட்டத்தை சம்பிக்க ரணவக்க போன்ற இனவாதிகள் முன்னின்று இதற்கெதிராக வழக்கு தொடரப்பட்டு நிறுத்தப்பட்டது.ஜனாதிபதி அதிகாரத்தை கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் படி நாம் பல தடவை மஹிந்த ராஜபக்ஷவை கேட்டிருந்தோம். ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பின்னர் முஸ்லிம்களின் 80 வீத வாக்குககால் ஜனாதிபதியான மைத்திரிபாலவும் இதனை வழங்க முன்வரவில்லை. இதற்காக அழுத்தம் கூட கொடுக்க முடியாத கோழைகளாக ரவூப் ஹக்கீமும் ரிசாத் பதியுதீனும் மைத்திரி அரசில் அமைச்சர்களாக சுகம் அனுபவித்தனர்.இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி, விரைவில் இந்த வீட்டித்திட்டத்தை வழங்குவோம் என பகிரங்கமாக சொல்லியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்தார்.