• Jun 09 2025

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” - நாளை யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம்!

Thansita / Jun 8th 2025, 10:18 pm
image

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகறல் நிலையத்திற்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டம்  நாளை காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டச்செயலக முன்றலில்  முன்னெடுக்கப்படவுள்ளது. 

சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இப்  போராட்டத்தின் கருப்பொருளாக “சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தி சூழல் மாசடையச் செய்யும் செயலுக்கு எதிராக திரண்டு எழுவோம்” என  முன்வைக்கப்பட்டுள்ளன. 

தற்போது  நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் குடிப்பரம்பல் அதிகரித்துள்ளது.இதனால் கழிவுகளும் அதிகளவில் வெளியேற்றப்படுகின்றன.   கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காரைக்கால் திண்மக் கழிவகறல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள் 


குறித்த நிலையத்தில் கழிவுகளை முகாமை செய்யக்கூடிய திறனோ கொள்ளளவோ போதுமானதாக இல்லை. தற்போது குப்பைகள் தேங்கி பெருக்கெடுத்து காணப்படுகின்றன. 

உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த இடர்நிலை ஏற்பட்டுள்ளது. 


இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த 

போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  போராட்டத்தை ஏற்பாடு செய்த சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” - நாளை யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம் “இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகறல் நிலையத்திற்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டம்  நாளை காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டச்செயலக முன்றலில்  முன்னெடுக்கப்படவுள்ளது. சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இப்  போராட்டத்தின் கருப்பொருளாக “சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தி சூழல் மாசடையச் செய்யும் செயலுக்கு எதிராக திரண்டு எழுவோம்” என  முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது  நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் குடிப்பரம்பல் அதிகரித்துள்ளது.இதனால் கழிவுகளும் அதிகளவில் வெளியேற்றப்படுகின்றன.   கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காரைக்கால் திண்மக் கழிவகறல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள் குறித்த நிலையத்தில் கழிவுகளை முகாமை செய்யக்கூடிய திறனோ கொள்ளளவோ போதுமானதாக இல்லை. தற்போது குப்பைகள் தேங்கி பெருக்கெடுத்து காணப்படுகின்றன. உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த இடர்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  போராட்டத்தை ஏற்பாடு செய்த சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement