• May 03 2024

முல்லைத்தீவில் உடும்பு வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு ஏற்பட்ட நிலை...!

Sharmi / Feb 26th 2024, 1:29 pm
image

Advertisement

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறைச்சிக்காக பிடித்த மூன்று பேர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று(25) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டார பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்பட்ட 27,27,55 வயதுடைய மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து நான்கு உடும்புகள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


முல்லைத்தீவில் உடும்பு வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு ஏற்பட்ட நிலை. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக காட்டில் உடும்புகளை இறைச்சிக்காக பிடித்த மூன்று பேர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று(25) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டார பகுதியில் காட்டில் உடும்புகளை வேட்டையாடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த காட்டுப்பகுதியில் உடும்புகளை பிடித்து இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்பட்ட 27,27,55 வயதுடைய மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து நான்கு உடும்புகள் மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement