• Jun 11 2025

வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் எங்கே? - ராஹுல தேரர்

Chithra / Jun 10th 2025, 10:53 am
image


இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என  பேராசிரியர்  கொடபிடியே ராஹூல தேரர் தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துக்கொண்டார்.

பாரம்பரியமான அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியடைந்த நிலையில் தான் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். 

குறுகிய காலத்துக்குள் மக்களின் எதிர்பார்ப்பு  பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மக்களின் எதிர்பார்ப்பு, அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

சட்டத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்.இருப்பினும் அரசாங்கம் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. 

பரிசோதனைகள் ஏதுமின்றி 300 இற்கும் அதிகமான கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இந்தியாவுடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் கேள்வியெழுப்பப்படுகிறது.

இதன் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.என்றார்.


வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் எங்கே - ராஹுல தேரர் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பான உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என  பேராசிரியர்  கொடபிடியே ராஹூல தேரர் தெரிவித்தார்.கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துக்கொண்டார்.பாரம்பரியமான அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியடைந்த நிலையில் தான் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். குறுகிய காலத்துக்குள் மக்களின் எதிர்பார்ப்பு  பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மக்களின் எதிர்பார்ப்பு, அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.சட்டத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்.இருப்பினும் அரசாங்கம் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. பரிசோதனைகள் ஏதுமின்றி 300 இற்கும் அதிகமான கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது.அத்துடன் இந்தியாவுடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் கேள்வியெழுப்பப்படுகிறது.இதன் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement