• Nov 24 2025

யாழில் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சித்தப்பா கைது

Aathira / Nov 23rd 2025, 12:27 pm
image

யாழில் சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபரான சித்தப்பா இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சித்தப்பா கைது யாழில் சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபரான சித்தப்பா இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இன்றையதினம் குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவருகிறது.மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement