• Jun 16 2025

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு யாருக்கு? அறிவிப்பு வெளியிடப்படும் - திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு!

Thansita / Jun 15th 2025, 5:54 pm
image

உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவ யாருக்கும் தனி அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும்,

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கா அல்லது தேசிய மக்கள் சக்திக்கா வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய சபை கூட்டம்  இன்று ஹட்டனில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் கூடிய பின்னர்

 ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் பழனி திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஏனைய கட்கிகளுடன் இணைந்து தான் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஆனால், உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து விவாதிக்க தனது கூட்டணிக்கு பல அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தாலும், அந்த அரசியல் கட்சிகள் யாருடனும் இவ்விடயம் குறித்து பேசவில்லை என்றும்,

சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு எமது அனுமதி இல்லாமல் உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

தொழிலாளர் தேசிய முன்னணியின் நிர்வாகக் குழுவில் இன்று பல புதிய பதவிகள் நியமிக்கப்பட்டதாகவும், அதன்படி, தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளராக கனபதி நகுலேஷ், பொருளாளராக ஷான் பிரபா, பிரச்சார செயலாளராக ஏ. கல்யாண குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு யாருக்கு அறிவிப்பு வெளியிடப்படும் - திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவ யாருக்கும் தனி அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கா அல்லது தேசிய மக்கள் சக்திக்கா வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய சபை கூட்டம்  இன்று ஹட்டனில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் கூடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் பழனி திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஏனைய கட்கிகளுடன் இணைந்து தான் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஆனால், உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றார்.உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து விவாதிக்க தனது கூட்டணிக்கு பல அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தாலும், அந்த அரசியல் கட்சிகள் யாருடனும் இவ்விடயம் குறித்து பேசவில்லை என்றும், சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு எமது அனுமதி இல்லாமல் உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்தொழிலாளர் தேசிய முன்னணியின் நிர்வாகக் குழுவில் இன்று பல புதிய பதவிகள் நியமிக்கப்பட்டதாகவும், அதன்படி, தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளராக கனபதி நகுலேஷ், பொருளாளராக ஷான் பிரபா, பிரச்சார செயலாளராக ஏ. கல்யாண குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement