• Sep 08 2024

யாழில் விபத்தில் குடும்பப்பெண் உயிரிழப்பு - இருவர் விளக்கமறியலில் - மேலும் இருவர் கைது!

Tamil nila / Jul 26th 2024, 10:22 pm
image

Advertisement

மானிப்பாய் பொலில் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் நேற்றையதினம் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளதுடன் அவர்களை நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் விபத்தில் குடும்பப்பெண் உயிரிழப்பு - இருவர் விளக்கமறியலில் - மேலும் இருவர் கைது மானிப்பாய் பொலில் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் நேற்றையதினம் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.இந்நிலையில் மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளதுடன் அவர்களை நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement