மக்கள் எமக்குத் தந்த ஆணையை மதித்து ஊழல் மோசடி அற்ற ஒரு நிர்வாகத்தை முன்கொண்டு செல்வதற்கு, அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும், ஊழியர்களும் தியாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சேனுராமன் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (9) நடைபெற்றது. அதில் தவிசாளர் பதவிக்கான கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊழலும் லஞ்சமும் இல்லாத ஆட்சியிலே தான் பொறுப்பு கூறலும், மக்கள் பங்கு மற்றும் ஜனநாயகமும் உருவாகும். அப்போது தான் இந்தப் பிரதேச மண்ணின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.
தவிசாளர் , உதவி தவிசாளர் பதவி என்பது, வழி நடத்துவதற்கான பொறுப்பு கூறலே தவிர, அது அதிகாரம் அல்ல. இந்த நிலையில், இந்த சபையின் 13 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்படுவது இந்த மண்ணின் பெருமையைப் பாதுகாக்கும்.
இந்த நாட்டினுடைய பொருளாதார நிலைப்பாடு எல்லோருக்கும் நன்கு தெரியும். வெளிநாடுகளில் நாங்கள் கையேந்தி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் எமக்குத் தந்த ஆணையின்படி, எமது கிராமத்தை அபிவிருத்தி செய்து நாட்டுக்கு ஒரு முன்மாதிரியான பிரதேசமாக வெருகல் பிரதேசத்தை மாற்ற வேண்டும்.
இந்த பிரதேசம் போரியல் வரலாற்றைக் கொண்டு ஒரு நசுக்கப்பட்ட கிராமமாகும். சொத்துக்களையும் உயிர்களையும் பலி கொடுத்து, ஒரு சுடுகாட்டு வரலாற்றைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். வெருகலம்பதி, தமிழினத்தின் அடையாளமாகும். இதனை ஒரு புனித பூமியாக கருதி, எமது சேவையை ஆற்ற வேண்டும் .
ஆரம்ப காலத்தில், சேருநுவர பிரதேச சபையோடு இணைந்திருந்த இந்தப் பிரதேசம், தனியான பிரதேச சபையாக மாற்றப்பட்டமைக்கு யார் காரணம்? யுத்த காலத்தில் தங்களுடைய இன்னுயிரை துச்சமாக மதித்து, தமிழ் இனத்துக்காக, மண் மீட்பு போராட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த மக்களின் வித்துக்களாக உழைத்து வந்திருப்பதே இந்த வெருகல் பிரதேசசபை ஆகும்.
எனவே, அந்த தியாகிகளுக்காக நாங்கள் தியாகத்தோடு பணியாற்ற வேண்டும். இந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரச திணைக்களங்களும், கடந்த காலங்களில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஊடாக பெறப்பட்டவையாகும். எனவே இந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வந்திருக்கின்ற உறுப்பினர்களின், தியாக சேவையை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக நாங்கள், எங்களுடைய பொறுப்புகளை ஒவ்வொருவரும் அதிகாரத்தோடு அல்லாமல், தியாகத்தோடு பணியாற்ற வேண்டும்.- என்றார்.
ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க தியாகத்தோடு பணியாற்றுங்கள் - வெருகல் பிரதேச சபை தவிசாளர். மக்கள் எமக்குத் தந்த ஆணையை மதித்து ஊழல் மோசடி அற்ற ஒரு நிர்வாகத்தை முன்கொண்டு செல்வதற்கு, அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும், ஊழியர்களும் தியாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சேனுராமன் கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (9) நடைபெற்றது. அதில் தவிசாளர் பதவிக்கான கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழலும் லஞ்சமும் இல்லாத ஆட்சியிலே தான் பொறுப்பு கூறலும், மக்கள் பங்கு மற்றும் ஜனநாயகமும் உருவாகும். அப்போது தான் இந்தப் பிரதேச மண்ணின் கண்ணியமும் பாதுகாக்கப்படும்.தவிசாளர் , உதவி தவிசாளர் பதவி என்பது, வழி நடத்துவதற்கான பொறுப்பு கூறலே தவிர, அது அதிகாரம் அல்ல. இந்த நிலையில், இந்த சபையின் 13 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்படுவது இந்த மண்ணின் பெருமையைப் பாதுகாக்கும்.இந்த நாட்டினுடைய பொருளாதார நிலைப்பாடு எல்லோருக்கும் நன்கு தெரியும். வெளிநாடுகளில் நாங்கள் கையேந்தி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் எமக்குத் தந்த ஆணையின்படி, எமது கிராமத்தை அபிவிருத்தி செய்து நாட்டுக்கு ஒரு முன்மாதிரியான பிரதேசமாக வெருகல் பிரதேசத்தை மாற்ற வேண்டும்.இந்த பிரதேசம் போரியல் வரலாற்றைக் கொண்டு ஒரு நசுக்கப்பட்ட கிராமமாகும். சொத்துக்களையும் உயிர்களையும் பலி கொடுத்து, ஒரு சுடுகாட்டு வரலாற்றைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். வெருகலம்பதி, தமிழினத்தின் அடையாளமாகும். இதனை ஒரு புனித பூமியாக கருதி, எமது சேவையை ஆற்ற வேண்டும் .ஆரம்ப காலத்தில், சேருநுவர பிரதேச சபையோடு இணைந்திருந்த இந்தப் பிரதேசம், தனியான பிரதேச சபையாக மாற்றப்பட்டமைக்கு யார் காரணம் யுத்த காலத்தில் தங்களுடைய இன்னுயிரை துச்சமாக மதித்து, தமிழ் இனத்துக்காக, மண் மீட்பு போராட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த மக்களின் வித்துக்களாக உழைத்து வந்திருப்பதே இந்த வெருகல் பிரதேசசபை ஆகும்.எனவே, அந்த தியாகிகளுக்காக நாங்கள் தியாகத்தோடு பணியாற்ற வேண்டும். இந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரச திணைக்களங்களும், கடந்த காலங்களில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஊடாக பெறப்பட்டவையாகும். எனவே இந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வந்திருக்கின்ற உறுப்பினர்களின், தியாக சேவையை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக நாங்கள், எங்களுடைய பொறுப்புகளை ஒவ்வொருவரும் அதிகாரத்தோடு அல்லாமல், தியாகத்தோடு பணியாற்ற வேண்டும்.- என்றார்.