• Oct 29 2024

திருகோணமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு

Tharmini / Oct 28th 2024, 4:52 pm
image

Advertisement

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும்  அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தற்போது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வாக்களிப்பு நிலையங்களில்  சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள், தேர்தல் தொடர்பான சட்டங்கள், தேர்தலுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள், தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்கு சாவடியை அடைந்ததன் பின்னர் செய்ய வேண்டியவை, வாக்களிப்பு நிலைய முகவர்கள்,  ஒத்திகை நடாத்தல், முதலாவது செய்தி அறிவித்தல் வழங்குதல், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது அதனை சூழவுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட நடத்தைகள், வாக்கெடுப்பை முடிவுறுத்தல், 

வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டியை பொறியிடும் முறை போன்ற பல விடயங்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரினால் தெளிவூட்டப்பட்டது.

இதன்போது தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும்  அலுவலர்கள் 135 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




திருகோணமலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும்  அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தற்போது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து வாக்களிப்பு நிலையங்களில்  சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள், தேர்தல் தொடர்பான சட்டங்கள், தேர்தலுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள், தேர்தலுக்கு முந்தைய நாள் வாக்கு சாவடியை அடைந்ததன் பின்னர் செய்ய வேண்டியவை, வாக்களிப்பு நிலைய முகவர்கள்,  ஒத்திகை நடாத்தல், முதலாவது செய்தி அறிவித்தல் வழங்குதல், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது அதனை சூழவுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட நடத்தைகள், வாக்கெடுப்பை முடிவுறுத்தல், வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டியை பொறியிடும் முறை போன்ற பல விடயங்கள் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரினால் தெளிவூட்டப்பட்டது.இதன்போது தமிழ் மொழி பேசும் சிரேஸ்ட தலைமை தாங்கும்  அலுவலர்கள் 135 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement