தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று இன்று(14) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கு இணங்க இடம்பெற்ற குறித்த நிகழ்வில், உளநலம் உள்ளிட்ட உளநெருக்கடி இதனை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் போன்றன தெளிவூட்டப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு வளவாளராக கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி கலந்து கொண்டார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் B.U.B.L.உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
![](https://samugammedia.com/public/samugam_uploads/17183580860.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/17183580861.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/17183580862.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/17183580863.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/17183580864.png)
![](https://samugammedia.com/public/samugam_uploads/17183580865.png)