மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தூணில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (18)இரவு சம்பவித்துள்ளது.
விபத்தில் கற்பிட்டி, கண்டல்குடா பகுதியைச் சேர்ந்த ஜஸார் முஹம்மது ஜஸ்ரின் என்ற 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இளைஞரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் இருந்து , புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள் - தூணுடன் மோதி இளைஞர் உயிரிழப்பு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தூணில் மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (18)இரவு சம்பவித்துள்ளது. விபத்தில் கற்பிட்டி, கண்டல்குடா பகுதியைச் சேர்ந்த ஜஸார் முஹம்மது ஜஸ்ரின் என்ற 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார். இளைஞரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் இருந்து , புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்டார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.