• May 19 2024

யாழின் முக்கிய பகுதியில் இளைஞர்கள் அதிரடி...! கசிப்பு கோட்டை முற்றுகை...! மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்...!samugammedia

Sharmi / Jan 20th 2024, 2:25 pm
image

Advertisement

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இளைஞர்களால்  அதிரடியாக முற்றுகையிடப்பட்டதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஊரெழு  பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்பு குழுவொன்று கோப்பாய் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த சிவில் பாதுகாப்பு குழுவினர் இன்றைய தினம் ஊரெழு கிராமத்தில் அதிரடியாக சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது  கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களும் தென்னை மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கசிப்பும் சிவில் பாதுகாப்பு குழுவால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்திப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. 

மேலும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



யாழின் முக்கிய பகுதியில் இளைஞர்கள் அதிரடி. கசிப்பு கோட்டை முற்றுகை. மீட்கப்பட்ட முக்கிய பொருட்கள்.samugammedia யாழில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இளைஞர்களால்  அதிரடியாக முற்றுகையிடப்பட்டதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் ஊரெழு  பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்பு குழுவொன்று கோப்பாய் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த சிவில் பாதுகாப்பு குழுவினர் இன்றைய தினம் ஊரெழு கிராமத்தில் அதிரடியாக சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர்.இதன்போது  கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களும் தென்னை மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கசிப்பும் சிவில் பாதுகாப்பு குழுவால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்திப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. மேலும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement