• Sep 21 2024

ஒருநாள் உணவிற்கு 1000 ரூபா போதாது: பிரதமருக்கு இடித்துரைத்தார்-செந்தில்!

Sharmi / Jan 31st 2023, 9:40 am
image

Advertisement

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 1000 ரூபா நாள் சம்பளமானது அவர்களின் முழுமையான ஒரு நாள் உணவுக்கு கூட  போதுமானதல்ல என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ' கட்சியின்  தலைவர் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்துள்ளார்.

பிரதமர் தினேஸ குணவர்தனவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்கும் வரி அதிகரிப்பு என்பது ஏற்றுக்கொள்ள  முடியாத விடயம் என்றும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு அரசாங்கத்தை நடத்த வரி என்பது அவசியம் என தெரிவித்த அவர், ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் அதிகரித்து டொலரின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாவதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 1000 நாள் சம்பளம் அவர்களின்  முழுமையான ஒரு நாள் உணவுக்கு  போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தேயிலை மற்றும் றப்பர் ஏற்றுமதி சார்ந்த தொழிலாக இருப்பதால்  அந்நியசெலவானி ஊடாக இரட்டிப்பு இலாபம் ஈட்டிக்கொடுக்கிறது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக டாலர் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இதனூடாக பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர்கள் இரட்டிப்பு இலாபம் பெற்றுக் கொள்கின்றனர். இதனால்  தோட்ட தொழிலாளர்களின் சம்பளமும் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலுவான கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


ஒருநாள் உணவிற்கு 1000 ரூபா போதாது: பிரதமருக்கு இடித்துரைத்தார்-செந்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 1000 ரூபா நாள் சம்பளமானது அவர்களின் முழுமையான ஒரு நாள் உணவுக்கு கூட  போதுமானதல்ல என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ' கட்சியின்  தலைவர் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்துள்ளார்.பிரதமர் தினேஸ குணவர்தனவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்கும் வரி அதிகரிப்பு என்பது ஏற்றுக்கொள்ள  முடியாத விடயம் என்றும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஒரு அரசாங்கத்தை நடத்த வரி என்பது அவசியம் என தெரிவித்த அவர், ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் அதிகரித்து டொலரின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டிருந்தார்.இரண்டாவதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 1000 நாள் சம்பளம் அவர்களின்  முழுமையான ஒரு நாள் உணவுக்கு  போதுமானதல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.தேயிலை மற்றும் றப்பர் ஏற்றுமதி சார்ந்த தொழிலாக இருப்பதால்  அந்நியசெலவானி ஊடாக இரட்டிப்பு இலாபம் ஈட்டிக்கொடுக்கிறது.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக டாலர் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இதனூடாக பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர்கள் இரட்டிப்பு இலாபம் பெற்றுக் கொள்கின்றனர். இதனால்  தோட்ட தொழிலாளர்களின் சம்பளமும் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலுவான கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement