• Jun 19 2025

குளவி கொட்டுக்கு இலக்கான 12 தோட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

Chithra / Jun 19th 2025, 12:19 pm
image


பொகவந்தலாவ தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர்  குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதில் 09 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உட்பட 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பொகவந்தலாவ தோட்டத்தில் இன்று தேயிலை செடிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது, தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தோட்டத் தொழிலாளியின் கால் மோதியதை அடுத்து, குளவிகள் கலைந்து கொட்டியுள்ளன. 

நிலவும் மோசமான வானிலை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கூடு கட்டி உள்ளன. 

தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கொட்டி உள்ளமையால், தேயிலை கொழுந்து பரிப்பதை நிர்வாகம் நிறுத்தியுள்ளது என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


குளவி கொட்டுக்கு இலக்கான 12 தோட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் பொகவந்தலாவ தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர்  குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 09 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உட்பட 12 பேர் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ தோட்டத்தில் இன்று தேயிலை செடிகளுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு மீது, தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண் தோட்டத் தொழிலாளியின் கால் மோதியதை அடுத்து, குளவிகள் கலைந்து கொட்டியுள்ளன. நிலவும் மோசமான வானிலை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கூடு கட்டி உள்ளன. தோட்டத் தொழிலாளர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான குளவிகள் கொட்டி உள்ளமையால், தேயிலை கொழுந்து பரிப்பதை நிர்வாகம் நிறுத்தியுள்ளது என தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement