நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்கள் ஒரு படகில், நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து நேற்றைய தினம் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு அழைத்து சென்ற கடற்படையினர் , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெடுந்தீவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்தொழிலாளர்கள் ஒரு படகில், நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து நேற்றைய தினம் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கு அழைத்து சென்ற கடற்படையினர் , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.