• Sep 17 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 129 முறைப்பாடுகள் பதிவு..!

Sharmi / Sep 4th 2024, 8:45 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 129 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழுவின் தகவலின்படி, பெறப்பட்ட தேர்தல் புகார்களின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 754 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,266 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் 2,020 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ளன.

இது தவிர வன்முறைச் செயல்கள் தொடர்பாக 14 புகார்களும், 64 புகார்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 129 முறைப்பாடுகள் பதிவு. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 129 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தேர்தல் ஆணைக்குழுவின் தகவலின்படி, பெறப்பட்ட தேர்தல் புகார்களின் எண்ணிக்கை 2,098 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 754 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,266 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இவற்றில் 2,020 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ளன.இது தவிர வன்முறைச் செயல்கள் தொடர்பாக 14 புகார்களும், 64 புகார்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement