• Jul 02 2024

நண்பர்களுடன் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு..! இரணைமடுக்குளத்தில் நடந்த துயரம்

Chithra / Jun 30th 2024, 12:18 pm
image

Advertisement


கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக குறித்த சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளார்.

நேற்று காலை 11.30 மணியளவில் இவர்கள் நீராடச் சென்றதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த சிறுவனை பொலிஸார், இரணைமடு மீனவர்கள், பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போயுள்ளது.

இதையடுத்து இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து  வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


நண்பர்களுடன் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு. இரணைமடுக்குளத்தில் நடந்த துயரம் கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக குறித்த சிறுவனும், அவரது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளார்.நேற்று காலை 11.30 மணியளவில் இவர்கள் நீராடச் சென்றதாக தெரியவருகின்றது.இந்நிலையில் குறித்த சிறுவனை பொலிஸார், இரணைமடு மீனவர்கள், பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போயுள்ளது.இதையடுத்து இன்று மீண்டும் தேடப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காணாமல் போன சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து  வந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement