• Sep 20 2024

14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! மரணத்தில் சந்தேகம்..! திருமலையில் சம்பவம்

Chithra / Aug 2nd 2024, 1:31 pm
image

Advertisement

 

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர்   தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சடலம் நேற்றைய தினம் திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில்,

சட்ட வைத்திய அதிகாரி வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாணவி துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். 

சிறுமியின் தந்தை 2013ஆம் ஆண்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமையும் பொலிஸ் விசாரணையின்போது தெரியவருகிறது.

மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


14 வயது மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு மரணத்தில் சந்தேகம். திருமலையில் சம்பவம்  திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர்   தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாணவியின் சடலம் நேற்றைய தினம் திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில்,சட்ட வைத்திய அதிகாரி வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவி துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சிறுமியின் தந்தை 2013ஆம் ஆண்டு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமையும் பொலிஸ் விசாரணையின்போது தெரியவருகிறது.மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement