• Sep 20 2024

பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!samugammedia

Sharmi / Apr 19th 2023, 10:33 pm
image

Advertisement

நபர் ஒருவர் 8 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையால் அவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த  டாரெல் குட்லோ என்பவர்  8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளது.

இந்த வழக்குகள் இண்டியானா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2021- ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இதில் டாரெல் குட்லோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.

இதையடுத்து  டாரெல் குட்லோவுக்கு 156½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நீதிமன்றம் தீர்பளித்துள்ளமை பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.samugammedia நபர் ஒருவர் 8 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமையால் அவருக்கு 156 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை அனைவரையும் திகைப்படைய செய்துள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த  டாரெல் குட்லோ என்பவர்  8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொள்ளை மற்றும் வளர்ப்பு நாயை கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இவ்வாறு மொத்தம் 57 குற்ற வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளது. இந்த வழக்குகள் இண்டியானா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2021- ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இதில் டாரெல் குட்லோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது. இதையடுத்து  டாரெல் குட்லோவுக்கு 156½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நீதிமன்றம் தீர்பளித்துள்ளமை பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement