• Sep 17 2024

சீரற்ற காலநிலையால் 18 ஆயிரம் பேர் பாதிப்பு...!

Anaath / May 31st 2024, 1:17 pm
image

Advertisement

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 5341 குடும்பங்களை சேர்ந்த 18473 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  பதுளை , நுவரெலியா ,புத்தளம், காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக களுத்துறை  மாவட்டத்தில்  1006  குடும்பங்களை சேர்ந்த 3658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமனைந்துள்ளனர் அத்துடன்  5 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 917 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

கம்பஹா  மாவட்டத்தில்  167 குடும்பங்களை சேர்ந்த 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  1 வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 617 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

கொழும்பில் 20 குடும்பங்கள் உட்பட 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 452  குடும்பங்களை சேர்ந்த 1465 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3  பேர்   உயிரிழந்துள்ளதுனர் அத்துடன்  ஐவர்  காயமடைந்துள்ளனர். 

இதே வேளை குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்கள்  உட்பட 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இதே வேளை தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1929 பேர் உட்பட 6651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 5பேர்  காயமடைந்துள்ளனர். அத்துடன்10 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  1982 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 1321 குடும்பங்கள் உட்பட 4399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 6 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1394 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 588குடும்பங்களை சேர்ந்த 2177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன்4 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  569 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த  75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  19 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.

வடமாகாணத்தில் 447 குடும்பங்களை சேர்ந்துள்ள 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டதில் 437 குடும்பங்களை சேர்ந்துள்ள 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

சப்பிரகமுவ மாகாணத்தில் 868 குடும்பங்களை சேர்ந்துள்ள3222பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன்  இருவர்  உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 811 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 843குடும்பங்களை சேர்ந்த 3222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  2 குடும்பங்களை    சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 68 குடும்பங்களை சேர்ந்துள்ள 234 பேர் பலத்த காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 68 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நுவரெலியாவில் 232 குடும்பங்களை சேர்ந்துள்ள  815 பேர் பாதிக்கப்பட்டுள்ள்ளனர். அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 298 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன் 36 குடும்பங்களை செந்துள்ள 146 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை வட மத்திய மாகாணத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 263 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்துள்ள 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

ஊவாமாகாணம் பதுளையில் 27 குடும்பங்கள் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மொனராகலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்துள்ள நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் 18 ஆயிரம் பேர் பாதிப்பு. இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 5341 குடும்பங்களை சேர்ந்த 18473 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  பதுளை , நுவரெலியா ,புத்தளம், காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.குறிப்பாக களுத்துறை  மாவட்டத்தில்  1006  குடும்பங்களை சேர்ந்த 3658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமனைந்துள்ளனர் அத்துடன்  5 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 917 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கம்பஹா  மாவட்டத்தில்  167 குடும்பங்களை சேர்ந்த 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  1 வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 617 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கொழும்பில் 20 குடும்பங்கள் உட்பட 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தில் 452  குடும்பங்களை சேர்ந்த 1465 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3  பேர்   உயிரிழந்துள்ளதுனர் அத்துடன்  ஐவர்  காயமடைந்துள்ளனர். இதே வேளை குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்கள்  உட்பட 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.இதே வேளை தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1929 பேர் உட்பட 6651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 5பேர்  காயமடைந்துள்ளனர். அத்துடன்10 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  1982 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 1321 குடும்பங்கள் உட்பட 4399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 6 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1394 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.மாத்தறை மாவட்டத்தில் 588குடும்பங்களை சேர்ந்த 2177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன்4 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  569 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த  75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்  19 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.வடமாகாணத்தில் 447 குடும்பங்களை சேர்ந்துள்ள 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கிளிநொச்சி மாவட்டதில் 437 குடும்பங்களை சேர்ந்துள்ள 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சப்பிரகமுவ மாகாணத்தில் 868 குடும்பங்களை சேர்ந்துள்ள3222பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன்  இருவர்  உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 811 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 843குடும்பங்களை சேர்ந்த 3222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  2 குடும்பங்களை    சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 68 குடும்பங்களை சேர்ந்துள்ள 234 பேர் பலத்த காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 68 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.நுவரெலியாவில் 232 குடும்பங்களை சேர்ந்துள்ள  815 பேர் பாதிக்கப்பட்டுள்ள்ளனர். அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 298 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.அத்துடன் 36 குடும்பங்களை செந்துள்ள 146 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதே வேளை வட மத்திய மாகாணத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 263 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்துள்ள 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.ஊவாமாகாணம் பதுளையில் 27 குடும்பங்கள் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மொனராகலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்துள்ள நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement