• May 07 2024

நண்பர்களுடன் நீராடச் சென்ற 19 வயது இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்..! samugammedia

Chithra / Dec 2nd 2023, 8:08 am
image

Advertisement

 

எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் நேற்றைய தினம் (01) நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எகொடஉயன மீனவர் இல்லத்தில் வசிக்கும் 19 வயதுடைய சுபுன் சதுரங்க என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இளைஞன் வேலைக்காக நேர்காணலுக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து நீராடச் சென்றிருந்த போது இவ்வாறு தீடீரென வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

காணாமற்போன இளைஞனைக் தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் முன்னெடுத்த போதிலும், அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற 19 வயது இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம். samugammedia  எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் நேற்றைய தினம் (01) நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.எகொடஉயன மீனவர் இல்லத்தில் வசிக்கும் 19 வயதுடைய சுபுன் சதுரங்க என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காணாமல் போன இளைஞன் வேலைக்காக நேர்காணலுக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் அவர் மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து நீராடச் சென்றிருந்த போது இவ்வாறு தீடீரென வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.காணாமற்போன இளைஞனைக் தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் முன்னெடுத்த போதிலும், அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement