2025 ஆம் ஆண்டுக்கான 18 ஆவது ஐ.பி.எல் சாம்பியனின் இறுதி சமர் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2 ஆவது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
அதனையடுத்து தகுதிகாண் இரண்டாவது சுற்றில் மும்மை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரு அணிக்கு இந்த ஆண்டு சாம்பியன் வெல்வதில் பெரும் ஈடுபாடு உள்ளது. அதிலும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 18 வருடங்களாக சாம்பியன் பட்டத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளது.
இந்த ஆண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் இந்த இறுதிப்போட்டியில் வென்று மகுடம் சூட வேண்டும் என்று பல இரசிகர்கர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எனினும் சாம்பியனை வெல்லப் போவது எந்த அணி என்பது இன்றை ஆட்ட முடிவில் நாம் அறிந்து கொள்ளலாம்.
2025 ஐ.பி.எல் இறுதி சமர் இன்று ; சாம்பியன் ரோயலுக்கா பஞ்சாப்புக்கா எதிர்பார்ப்புடன் ரசிகர்கள். 2025 ஆம் ஆண்டுக்கான 18 ஆவது ஐ.பி.எல் சாம்பியனின் இறுதி சமர் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 18 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த மார்ச் 22ஆம் திகதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2 ஆவது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. அதனையடுத்து தகுதிகாண் இரண்டாவது சுற்றில் மும்மை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இரு அணிக்கு இந்த ஆண்டு சாம்பியன் வெல்வதில் பெரும் ஈடுபாடு உள்ளது. அதிலும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 18 வருடங்களாக சாம்பியன் பட்டத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போயுள்ளது. இந்த ஆண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோயல் பெங்களூரு சேலஞ்சர்ஸ் இந்த இறுதிப்போட்டியில் வென்று மகுடம் சூட வேண்டும் என்று பல இரசிகர்கர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எனினும் சாம்பியனை வெல்லப் போவது எந்த அணி என்பது இன்றை ஆட்ட முடிவில் நாம் அறிந்து கொள்ளலாம்.