• Oct 09 2024

நெடுந்தீவுக் கடற்பரப்பில் 21 இந்திய மீனவர்கள் கைது!

Chithra / Oct 9th 2024, 6:46 pm
image

Advertisement


இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கைளிக்கப்படவுள்ளனர்.

மேற்படி 21 இந்திய மீனவர்களும் நாளை வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் 21 இந்திய மீனவர்கள் கைது இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கைளிக்கப்படவுள்ளனர்.மேற்படி 21 இந்திய மீனவர்களும் நாளை வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement