• Jul 06 2024

26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tamil nila / Jul 3rd 2024, 7:46 pm
image

Advertisement

இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துகின்றன.

வனாத்தவில்லு ஆற்றின் வாடி, வனாத்தவில்லு களப்பு தீவு, கல்பிட்டி குடா , கல்பிட்டி வைகால, நீர்கொழும்பு தடாகம், நீர்கொழும்பு கபுங்கொட, வத்தளை பிரிதிபுர, பெந்தோட்ட கடற்கரை, ஹபராதுவ கொக்கல லகூன், திக்வெல்ல சீதாகால்ல, தங்கல்ல ரெகவ லகூன், அம்பலாங்கொடை லூனம் லகூன், ஹம்பாந்தோட்டை மலல லேயாவ, திஸ்ஸமஹாராம கிரிந்த வெலி மலை லாஹுகல குனுக்கல கடற்கரை, பொத்துவில் எலிபெண்ட் ரொக், மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு சல்லதீவு, கிண்ணியா தம்பலகமுவ குடா, திருகோணமலை ஆளுநரின் அலுவலகப் பகுதி, திருகோணமலை உப்புவெளி, திருகோணமலை சம்பல் தீவு, குச்சிவெளி அரிசிமலை முல்லைத்தீவு நாயாறு குடா, முல்லைத்தீவு நந்திக்கடல் குடா, யாழ்ப்பாணம் சென்னக்குளம் கடற்கரை, யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரை ஆகிய கரையோரப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் 11 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டத்தின்படி, கடலோர வலயத் திட்டம் திருத்தப்பட்டு தேவையான இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, 2024-2029 ஆம் ஆண்டுக்கான கரையோர வலய முகாமைத்துவத் திட்டத்தின் திருத்தம் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துகின்றன.வனாத்தவில்லு ஆற்றின் வாடி, வனாத்தவில்லு களப்பு தீவு, கல்பிட்டி குடா , கல்பிட்டி வைகால, நீர்கொழும்பு தடாகம், நீர்கொழும்பு கபுங்கொட, வத்தளை பிரிதிபுர, பெந்தோட்ட கடற்கரை, ஹபராதுவ கொக்கல லகூன், திக்வெல்ல சீதாகால்ல, தங்கல்ல ரெகவ லகூன், அம்பலாங்கொடை லூனம் லகூன், ஹம்பாந்தோட்டை மலல லேயாவ, திஸ்ஸமஹாராம கிரிந்த வெலி மலை லாஹுகல குனுக்கல கடற்கரை, பொத்துவில் எலிபெண்ட் ரொக், மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு சல்லதீவு, கிண்ணியா தம்பலகமுவ குடா, திருகோணமலை ஆளுநரின் அலுவலகப் பகுதி, திருகோணமலை உப்புவெளி, திருகோணமலை சம்பல் தீவு, குச்சிவெளி அரிசிமலை முல்லைத்தீவு நாயாறு குடா, முல்லைத்தீவு நந்திக்கடல் குடா, யாழ்ப்பாணம் சென்னக்குளம் கடற்கரை, யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரை ஆகிய கரையோரப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மேலும் கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் 11 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.மேலும், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டத்தின்படி, கடலோர வலயத் திட்டம் திருத்தப்பட்டு தேவையான இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, 2024-2029 ஆம் ஆண்டுக்கான கரையோர வலய முகாமைத்துவத் திட்டத்தின் திருத்தம் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement