• Nov 18 2025

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 30 ராமேஸ்வரம் மீனவர்கள்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Oct 9th 2025, 8:34 pm
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம்  மீனவர்களை  எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று  மாலை உத்தரவிட்டுள்ளது.  

தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த  நிலையில்  கடற்படையினரால் நேற்று இரவு    கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 30  மீனவர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று  காலை,  மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு , திணைக்கள அதிகாரிகள் பதிவு நடவடிக்கைகளுக்கு பின்னர் இன்றுமாலை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்கள் மீது  எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  மன்னார் நீதிமன்றில்  முற்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை நெடுந்தீவு கடற்பரப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களை நேற்றிரவு கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களிடமிருந்து ஒரு படகையும் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 30 ராமேஸ்வரம் மீனவர்கள்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம்  மீனவர்களை  எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று  மாலை உத்தரவிட்டுள்ளது.  தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த  நிலையில்  கடற்படையினரால் நேற்று இரவு    கைது செய்யப்பட்டிருந்தனர்.கைது செய்யப்பட்ட 30  மீனவர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று  காலை,  மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு , திணைக்கள அதிகாரிகள் பதிவு நடவடிக்கைகளுக்கு பின்னர் இன்றுமாலை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.மீனவர்கள் மீது  எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  மன்னார் நீதிமன்றில்  முற்படுத்தப்பட்டனர்.குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.இதேவேளை நெடுந்தீவு கடற்பரப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களை நேற்றிரவு கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களிடமிருந்து ஒரு படகையும் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement